திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2337 days ago
கடலுார்: கடலுார், பழைய வண்டிப்பாளையம் திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடலுார், கரையேறவிட்டக்குப்பம், பழையவண்டிப்பாளையும் திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவில் அம்மன் வீதியுலா, நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து. இரவு 9:00 மணிக்கு அம்மன், கிருஷ்ணர் வீதியுலா நடந்தது. நேற்று இரவு பஷ்ப விமானத்தில் வீதியுலா நடந்தது.