திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல்
ADDED :2309 days ago
திருத்தணி : திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், 33 நாட்களில், பக்தர்கள், 68.72 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 7,447 கிராம் தங்கத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து, காணிக்கையாக, பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர். அந்த வகையில், 33 நாட்களில்ங உண்டியலில் செலுத்திய பக்தர்களின் காணிக்கைகள், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பொறுப்பு ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில், நேற்று (ஜூன்., 28ல்) உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டன.இதில், 68 லட்சத்து, 72 ஆயிரத்து, 977 ரூபாய் ரொக்கம், 744 கிராம் தங்கம், 5,820 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.