பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் (ஜூன்., 30ல்) பிரதோஷ த்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது மாலை 5:00 மணிக்கு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்திபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதே போல் பண்ருட்டி திருவதிகை குணபரேஸ்வரர் கோவில், பண்ருட்டி சோமநாத சுவாமி கோவில், திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவில், புதுப்பேட்டை, செம்மேடு காசிவிஸ்வநாதர் கோவில்களிலும் பிரதோஷம் முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு வழிபாடு,சிறப்பு பூஜைகள் நடந்தது.