மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பது எது?
ADDED :4974 days ago
மனிதன் ஆயுளை நிர்ணயிப்பது விதி தான். ஆனால், இப்பிறவியில் அனுபவிக்கும் விதியை நிர்ணயித்தது முன்வினைப்பயன். அவ்வினைப்பயனை உண்டாக்குவதில் ஒருவன் பின்பற்றும் ஒழுக்கத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அதனால் தான் தெய்வப்புலவர், நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம். தீயொழுக்கம் என்றும் இடும்பை (துன்பம்) தரும் என்று நமக்கு வழிகாட்டியுள்ளார். அதனால், ஒழுக்கத்தை பின்பற்றி வாழ்வை பயனுள்ளதாக்க வேண்டியது அவசியம்.