உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

கடலுார் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆனி  பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 6ம் தேதி காலை 10:00 மணிக்கு  திருமஞ்சனம் நடந்தது. நேற்று முன்தினம் 7ம் தேதி காலை 7:30-; - 9:00  மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. உபநாச்சியாருடன் வீதி புறப்பாடு,  இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.தினசரி காலை  7:00 மணிக்கு பெருமாள், உபயநாச்சியாருக்கு திருமஞ்சனம், காலை 10:00 மணி  மற்றும் இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக சிறப்பு  அலங் காரத்தில் வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்  அலுவலர் முத்து லட்சுமி, தக்கார் சுபத்ரா, மேலாளர் ஆழ்வார், அர்ச்சகர்  தேவநாதன் பட்டர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !