உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி ஸ்ரீவராகி அம்மனுக்கு முளைப்பாரி உற்சவம்

பண்ருட்டி ஸ்ரீவராகி அம்மனுக்கு முளைப்பாரி உற்சவம்

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக நன்மை  வேண்டி ஸ்ரீவராகி அம்மனுக்கு முளைப்பாரி உற்சவம் நடந்தது.ஸ்ரீ வராஹி  அம்மன் சன்னதியில், கடந்த 4ம் தேதி முதல் ஆஷாட நவராத்திரி உற்சவம்  நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் (ஜூலை., 7ல்) மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீவராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு முளைப்பாரி உற்சவத்திற்கான ஊர்வலம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !