உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏ.விளாக்குளத்தில் புரவி எடுப்பு விழா

ஏ.விளாக்குளத்தில் புரவி எடுப்பு விழா

மானாமதுரை:மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் மழை வேண்டி  புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனார்  கோயில் ஆனி செவ்வாய்பொங்கலை முன்னிட்டும், மழை பெய்து விவசாயம்  செழிக்க வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் 2 வருடங்களுக்கு ஒரு முறை  புரவி எடுப்பு விழா நடத்துவது வழக்கம். இந்தாண்டு கிராமத்திலிருந்து  ஊர்வலமாக மானாமதுரைக்கு வந்து செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கும்  பொம்மைகளுக்கும் பூஜை நடத்தி மேளதாளம் முழங்க புரவிகளையும் , பொம்மைகளையும் ஊர்வலமாக விளாக்குளத்திற்கு எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !