உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர உற்ஸவம் துவக்கம்

திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர உற்ஸவம் துவக்கம்

 திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் ஆடிப்பூர உற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் ஆடியில் ஆண்டாள் பூர நட்சத்திரத்தில் அவதரித்த நாளை முன்னிட்டு நடைபெறுகிறது.

11 நாட்கள் நடைபெறும் இந்த உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் சேனை முதல்வர் புறப்பாடு,அங்குரார்ப்பணமும் நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு ஆண்டாளும் பெருமாளும் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளினர். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து காலை 12:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.இரவில் சிம்ம வாகனத்தில் ஆண்டாளும்,பெருமாளும் திருவீதி புறப்பாடு நடந்தது.உற்ஸவத்தை முன்னிட்டு தினசரி காலை, இரவு வாகனங்களில் ஆண்டாள், பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெறும். ஆக.,1ல் காலையில் அலங்கார திருமஞ்சனமும், மாலையில் சூர்ணாபிஷேகமும், தொடர்ந்து திருவீதி புறப்பாடும் நடைபெறும். ஆக. 4ல் காலை 8:16 மணிக்கு மேல் ஆண்டாளும்.பெருமாளும் தேரில் எழுந்தருளுகின்றனர். மாலை 4:06 மணிக்கு தேரோட்டம் துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !