இப்பிறவியில் இருக்கும் உறவுகளே அடுத்த பிறவியிலும் தொடருமா?
ADDED :2360 days ago
பிறவி என்பது அவரவர் செய்த பாவ, புண்ணியத்தால் கிடைப்பது. இதனால் உறவுகள் தொடர வாய்ப்பில்லை. ஆனால் அடுத்த பிறவியிலும் உறவுகள் தொடர சிலர் வேண்டுவதுண்டு. நடராஜரின் திருவடிகளைக் காணும் பாக்கியம் கிடைத்தால் மீண்டும் பிறக்க திருநாவுக்கரசரும், சிவனின் திருவடியை போற்றும் பாக்கியம் கிடைத்தால், மறுபிறவி தரும்படி காரைக்கால் அம்மையாரும் வேண்டியது இங்கு சிந்திக்கத்தக்கது.