உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: மேல்மலையனுார் அடுத்த ரங்கநாதபுரம் வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, அன்று காலை விநாயகர், பெரியாழி அம்மன், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது.இரவு 10:15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !