உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் தெப்பம், சரவணப்பொய்கையை மீட்க சிறப்பு திட்டம்

மாரியம்மன் தெப்பம், சரவணப்பொய்கையை மீட்க சிறப்பு திட்டம்

மதுரை: மதுரை வைகை ஆறு, மாரி­யம்­மன் தெப்­பக்­கு­ளம், திருப்­ப­ரங்­குன்­றம் சர­வ­ணப்­பொய்­கையை மீட்க 9.4 கோடி ரூபா­யில் சிறப்பு திட்­டத்தை நிறை­வேற்ற மாந­க­ராட்சி நிர்­வா­கம் முடிவு செய்­துள்­ளது. வற்­றாத ஜீவ­ந­தி­யாக விளங்­கிய வைகை, இன்று நக­ரின் பிர­தான கழி­வு­நீர் கால்­வா­யாக திகழ்­கிறது. நக­ரின் வடக்கு பகு­தி­யி­லி­ருந்து அதிக கழி­வு­நீர் ஆற்­றில் கலக்­கிறது. பந்தல்­குடி, விளாங்­குடி, வண்­டி­யூர் கால்­வாய்­களில் இருந்து நேர­டி­யாக கழி­வு­நீர் விடப்­ப­டு­கிறது. குழாய்­கள் மூல­மும் கழி­வு ­நீர் கலக்­கிறது. இரு­பது ஆண்­டு­க­ளாக இந்­நிலை நில­வு­கிறது.தற்­போது கழி­வு­நீர் கலப்­பதை தடுக்க மாந­க­ராட்சி கமி­ஷ­னர் விசா­கன் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார். வண்­டி­யூர், விளாங்­குடி கால்­வாய் கழி­வு­நீரை சுத்­தி­க­ரிக்க 7.8 கோடி ரூபா­யில் திட்­டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி கால்­வாய்­கள் ஆற்­றில் சந்­திக்­கும் இரு இடங்­க­ளி­லும் சுத்­தி­க­ரிப்பு மையம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இவற்­றின் மூலம் தலா 2 எம்.எல்.டி., நீரை சுத்­தி­க­ரிக்­க­லாம். சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட நீரை சாலை­யோர பூங்­காக்­க­ளுக்கு பயன்­ப­டுத்­த­லாம். மீட்­கப்­படும் மாரி­யம்­மன் தெப்­பம் வண்­டி­யூர் மாரி­யம்­மன் தெப்­பக்­கு­ளத்தை மீட்­க­வும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. பனை­யூர் வரத்­துக் கால்­வாய் ஆக்­கி­ர­மிப்­பில் சிக்­கி­யுள்­ள­தால் வைகை­யி­லி­ருந்து தண்­ணீர் வரு­வ­தில்லை. இத­னால் வறண்­டுள்­ளது. தெப்­பத்­தி­ரு­வி­ழா­வுக்­காக மட்­டும் தண்­ணீர் நிரப்­பப்­படும். துார்வாரி வரத்­துக்­கால்­வாயை மீட்க ஒரு கோடி ரூபா­யா­கும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இத்­திட்­டம் நிறை­வேற்­றப்­பட்ட பின் ஆண்டு முழு­வ­தும் தெப்­பக்­கு­ளத்­தில் தண்­ணீர் இருக்­கும். சலவை, குளி­யல் மையம் துவைப்­பது, குளிப்­ப­தால் மாசு­பாட்­டில் சிக்கிய திருப்­ப­ரங்­குன்­றம் சர­வ­ணப்­பொய்­கையை மீட்க அருகே சலவை மையம், குளி­யல் மைய­மும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. குப்பை, பிளாஸ்­டிக், கழி­வு­கள் சேரா­த­வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.  இதற்­கான திட்­டத்­திற்கு 60 லட்­சம் ரூபாய் தேவை என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ரூ.9.4 கோடி தேவை: இம்­மூன்று திட்­டங்­க­ளுக்­கும் 9.4 கோடி ரூபாய் தேவை. இதற்­கான நிதியை மும்பை தனி­யார் நிறு­வ­னம் சி.எஸ்.ஆர்., நிதி­யில் இருந்து தர­வுள்­ளது. இதற்­காக திட்ட அறிக்கை அந்­நி­று­வ­னத்­திற்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. ஒப்­பு­தல் கிடைத்­த­தும் பணி­கள் துவங்­கும் என மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !