கேதார கவுரி விரதம் என்பது என்ன?
ADDED :2534 days ago
இமயமலையில் உள்ள ’கேதார் நாத்’ என்னும் இடத்தில், அம்பிகை விரதம் இருந்து சிவனுடன் இணைந்தாள். இதை ’கேதார கவுரி விரதம்’ என்பர். தம்பதியரின் ஒற்றுமைக்கும், சுமங்கலியாக வாழவும் ஐப்பசி அமாவாசைக்கு 21 நாட்களுக்கு முன்பு பெண்கள் விரதம் இருப்பர்.