பெரியபட்டினத்தில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா
ADDED :2353 days ago
பெரியபட்டினம் : பெரியபட்டினத்தில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நாளை(ஆக.,18) நடக்கிறது.-
பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. 118ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றம் ஆக.,8 (வியாழன்) மாலை நடந்தது. அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்று மவுலீது எனும் புகழ்மாலை ஓதி துஆ செய்தனர். 50 அடி உயர மினராவில் கொடியேற்றப்பட்டது.நாளை (ஆக., 18) மாலை முதல் கலை நிகழ்ச்சிகளும் மறுநாள் ஆக., 19 (திங்கட்கிழமை) அதிகாலை 4:00 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலமும், மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடக்கும். ஆக., 29 மாலையில் கொடியிறக்கம் செய்யப்படும். பெரியபட்டினம் சுல்தானியா சங்கத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.