உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

கடலுார் கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண  ஜெயந்தி விழா இன்று (24ம் தேதி) துவங்குகிறது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர்  திருவரசன் பிள்ளை தோட்டம் ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபிரான்  கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இன்று (24ம் தேதி) காலை 8:00 மணிக்கு  விசேஷ யாக வேள்வி, திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு உறியடி, வீதியுலா  நடக் கிறது. 25ம் தேதி காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு  திருக்கல் யாணம் நடக்கிறது.

வரும் 26ம் தேதி காலை 9:00 மணிக்கு  திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு கருட சேவையில் கண்ணபிரான்  வீதியுலாவும், 27ம் தேதி காலை 7:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00  மணி க்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சுந்தர் பட்டர்  செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !