கரூர் வெங்கடரமணர் கோவிலில் திருப்பவித்ரோத்ஸவம்
ADDED :2230 days ago
கரூர்: தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், திருப்பவித்ரோத்ஸவ விழா வரும் செப்டம்பர் மாதம், 11ல் நடக்கிறது. பிரசித்தி பெற்ற வெங்கடரமண கோவிலில், செப்., 9 மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தியுடன், திருப்பவித்ரோத்ஸவ விழா துவங்குகிறது.
மறுநாள் மாலை, 6:30 மணிக்கு மஹா சாந்தி ஹோமம் நடக்கிறது. அடுத்த நாள் காலை, 10:30 மணிக்கு, திருப்பவித்ரோத்ஸவம் மற்றும் மஹா திருப்பாவாடை நைவேத்யம் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.