மடத்துக்குளம் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் அமராவதி ஆற்றில் ஏற்பாடு
ADDED :2552 days ago
மடத்துக்குளம்:உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 400க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த விசர்ஜனத் திற்காக, மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆற்றுக்கு செல்ல பாதைகள் அமைக்கப்பட்டு சிலைகள் கரைப்பதற்காக இடம் ஒதுக்கி டிவைடர், மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று 3ம் தேதி 47 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இன்றும் 4ம் தேதி விசர்ஜனம் நடைபெறுகிறது.