சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆவணி விழா துவக்கம்
ADDED :2262 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் தெற்குவெங்காநல்லுார் சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஐந்து நாட்கள் நடக்கும் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக காலை 9:30 மணி முதல்சிவகாமி அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம், இளநீர்,விபூதி,பன்னீர் போன்ற 12 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.ஏராளமானோர் பங்கேற்றனர்.