உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாச்சேரியில் தயாராகும் கொலு பொம்மைகள்

விளாச்சேரியில் தயாராகும் கொலு பொம்மைகள்

திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில் நவராத்திரி திருவிழாவிற்காக மெகா சைஸ் கொலு மொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கு தகுந்தவாறு சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்கள் சிலைகள், 3 இஞ்ச் முதல் 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்து குடில்கள் ஆகியவற்றை களிமண், காகிதகூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட் மூலம் தயாரிக்கின்றனர்.

பொம்மைகள் வெளிமாநிலங்களுக்கு ஏற்று மதியாகின்றன. நவராத்திரி விழாவிற்காக தற்போது கொலுபொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.

தொழிலாளி ராமலிங்கம் கூறியதாவது: இந்தாண்டு நவராத்திரிக்காக அஷ்ட திக்கு பாலர்கள், நவக்கிரகங்கள், சப்த கன்னிமார், சந்தோஷி மாதா, வளையல் அம்மன், படிக்காசு அம்மன், சூரிய நமஸ்காரம் பொம்மைகள் ஆகியவைகளை மூன்று இஞ்ச் முதல் நான்கரை அடி உயரம் வரை காகித கூழால்தயாரிக்கிறோம். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு களிமண், காகிதகூழ் ஆகியவற்றால் மட்டுமே சிலைகள் தயாரிக்கப்படுகிறது. வீட்டு அலங்காரத்திற்காக பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரிக்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !