உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாதர் மீனாட்சி திருக்கல்யாணம்

சொக்கநாதர் மீனாட்சி திருக்கல்யாணம்

விருதுநகர்: விருதுநகர்  மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி விழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள்  பங்கேற்றனர்.

இக்கோயில் திருவிழா கடந்த  2 ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது.தினமும் சுவாமி அம்பாளுடன் வீதிஉலா வந்து மண்கப்படிகளில் எழுந்தருளினர். திருக்கல்யாணத்தையொட்டி   காலை 7:00 மணிக்கு பல்லக்கில் சீர் வைக்கப்பட்டு ரதவீதிகளில் சுற்றி வரப்பட்டது.   காலை 9:00 மணிக்கு சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் மாலை மாற்றினர். தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் காப்பு கட்டப்பட்டது. இதன்பின் பூணுல் போடும் வைபவம், கும்ப பூஜைகள், யாக பூஜைகள் நடந்தது. தாரை வார்த்தலை தொடர்ந்து சொக்கநாதர்- மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு பூஜைகளும்  நடந்தன.  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி அம்பாள் அருள்பெற்றனர்.  இைத தொடர்ந்து இரவு யானை வாகனம், புஷ்ப வாகனத்தில் வீதி உலா வந்து மண்டகப்படியில்  எழுந்தருளினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !