திருவாடானை நாச்சியார் அம்மன் கோயில் விழா
ADDED :2212 days ago
திருவாடானை:திருவாடானை அருகே அச்சங்குடி கிராமத்தில் உள்ள நாச்சியார் அம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கியநிகழ்ச்சியாக நேற்று 10 ம் தேதி நடந்த பூக்குழி யில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து தீ மிதித்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.பெண்கள் கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர். அன்ன தானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.