பொன்னேரி திருவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
பொன்னேரி:அரசூர், திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டு சென்றனர்.
பொன்னேரி அடுத்த, அரசூர் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தர்யவல்லி அம்பிகை சமேத திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று 12ம் தேதி வெகு விமரி சையாக நடந்தது.
கடந்த, 8ம் தேதி கிராம தேவதை வழிபாடுகளுடன் துவங்கிய கும்பாபிஷேக விழா, தொடர்ந்து யாகசாலை, கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்று வந்தன.நேற்று, காலை, 9:30 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, திருவாலீஸ்வரர், சவுந்தர்யவல்லி தாயார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.இதில், அரசூர், கூடுவாஞ் சேரி, மெதுார், காட்டாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டு சென்றனர்.