உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

உலகளந்த பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக் கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், புரட்டாசி இரண்டாம் சனிக் கிழமையை முன்னிட்டு, அதிகாலை 5:30 மணிக்கு மூலவர் உலகளந்த பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் கண்ணாடி அறைக்கு எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் வேத விற்பன்னர்கள் வேதமந்திரம் முழங்க சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், திருக்கல்யாண வைபவம் சாற்றுமுறை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !