உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் அர்த்தஜாம பூஜை

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் அர்த்தஜாம பூஜை

சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் நடந்த மகாளய  அமாவாசை அர்த்தஜாம பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.

சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில், அமாவாசை அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில், புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு அர்த்தஜாம பூஜை, மகா அபிஷேகம், விநாயகர் மற்றும் பிரம்மசாமுண்டி அம்மனுக்கு நெய் தீப வழிபாடு நடந்தது.

தில்லைக்காளி அம்மனுக்கு நல்லெண்ணெய் அபிேஷகம், தைல காப்பு,  பால், தயிர், வாசனை திரவியங்கள் போன்ற ஏராளமான பொருள்களால் மகா  அபிஷேகம் நடந்தது.

தில்லைக்காளியம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர்,  விளாமுச்சி வேர், செவ்வரளி பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு  அர்த்தஜாம பூஜைக, மகா தீபாராதனை நடந்தன.இதில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !