விருத்தாசலம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2234 days ago
விருத்தாசலம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு, விருத்தாசலம் அங்காளம்மன் கோவி லில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் (செப்., 28ல்) காலை சித்தி விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 11:00 மணிக்கு மேல், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, உட்பிரகார வலம் வரும்போது, குழந்தை வரம், திருமண வரம் வேண்டிய பக்தர்கள் அம்மனிடம் எலுமிச்சை பிரசாதம் பெறும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவத்தில், அங்காள பரமேஸ்வரி அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.