உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய பெரிய பெருமாள்

பெரிய பெரிய பெருமாள்

ஸ்ரீரங்கத்தில் ’பெரிய பெருமாள்’ இருக்கிறார். ’பெரிய பெரிய பெருமாள்’ யார் என்பதை அறிய இதை படியுங்கள். திருப்பதி சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணத்தில் மலை போல சாப்பாடு தயாராக இருந்தது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகரிஷிகள் சாப்பிடக் காத்திருந்தனர். படைப்புக்கடவுளான பிரம்மா மணக்கோலத்தில் நின்ற சீனிவாசரிடம், “இந்த உணவுகளை யாருக்கு நைவேத்யம் செய்வது எனத் தெரியவில்லையே” எனக் கேட்டார்.

“அகோபில நரசிம்மருக்கு படைத்த பின்பு விருந்தினருக்கு பரிமாறுங்கள்” என்றார். பத்மாவதியுடன் சீனிவாசப் பெருமாளும் அகோபிலம் சென்று நரசிம்மரை வழிபடவும் செய்தார். பெருமாளே வழிபட்டதால் நரசிம்மருக்கு ’பெரிய பெரிய பெருமாள்’ என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !