உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் ஜெருசலேம் புனித பயணம் கால அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல் ஜெருசலேம் புனித பயணம் கால அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல் : கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள  விண்ணப்பிக்க கால அவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேம் புனித பயணம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு அரசு ரூ.20 ஆயிரம்  வரை நிதியுதவி வழங்குகிறது. புனித பயணம் செல்ல விரும்புவோர்  விண்ணப்பிக்க கால அவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை  
பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அஞ்சல் உறையின் மேல்  கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி விண்ணப்பம்  2019-20என குறிப்பிட வேண்டும்.

கடிதத்தை ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால், பாரம்பரிய  கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600 005, முகவரிக்கு அனுப்ப  வேண்டும். விவரங்களுக்கு 044-2852 0033 ல் பேசலாம் என, கலெக்டர்  விஜயலட்சுமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !