குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை: அக்., 26ல் துவக்கம்
ADDED :2173 days ago
சோழவந்தான் : குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு அக்., 26ல் லட்சார்ச்சனை துவங்குகிறது.
அக்.,29 அதிகாலை விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு குரு பகவான் இடபெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு அனைத்து ராசிகாரர்களுக்கும் பரிகார பூஜையாக அக்.,26 காலை 10:35 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, அக்.,28 இரவு 8:00 மணிக்கு முடிகிறது. ரூ.300 செலுத்தினால் குருபகவான், சக்கரத்தாழ்வார் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலருடன் பிரசாத பை வழங்கப்படும். ரூ.100 செலுத்துபவர்களுக்கு பிரசாதம் மட்டும் வழங்கப்படும். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், தென்கரை மூலநாதர் சுவாமி மற்றும் குருவித்துறை கோயிலில் லட்சார்ச்சனை டிக்கெட் கிடைக்கும். ஏற்பாடுகளை தக்கார் ஜெயதேவி, செயல் அலுவலர் செந்தில்குமார் செய்து வருகின்றனர்.