உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கலுார் அலகுமலையில் கந்தசஷ்டி துவக்கம்

பொங்கலுார் அலகுமலையில் கந்தசஷ்டி துவக்கம்

பொங்கலுார்:பொங்கலுார் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் இன்று 28ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்குகிறது.விழாவையொட்டி இன்று 28ம் தேதி காலை, 7: 15 மணிக்கு கணபதி பூஜை நடக்கிறது.

தொடர்ந்து அலகு மலை அடிவாரம் முத்து திருமண மண்டபத்தில், பக்தர்கள் கங்கணம் அணி ந்து, சஷ்டி விரதம் துவங்குகின்றனர்.நாளை, 29ம் தேதி செவ்வாய்க்கிழமை, 7:00 மணிக்கு கந்தர்சஷ்டி கவசம் பாராயணம், 8:15 மணிக்கு ஆலய தரிசனம், 11:00 மணிக்கு ஆசிரமத்தில் வேலுக்கு அபிஷேகம், பூஜை, மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை, மாலை, 4:00 மணி யளவில் பஜனை, கந்தர்சஷ்டி பாராயணம், 5:45 மணிக்கு சத்சங்கம், பஜனை, கூட்டுப் பிரார் த்தனை நடக்கிறது.

நவ., 2ம் தேதி மதியம், 2:30 மணிக்கு முருகப்பெருமான் தன் தாய் பத்மாவதி தேவியிடமிருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி, மாலை, 5:00 மணிக்கு, கந்தர் சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ் வான சூர சம்காரம் நடக்கிறது. 6:30 மணிக்கு ஆசிரமத்தில் பக்தர்கள் கங்கணம் அவிழ்த்து விரதம் முடிக்கின்றனர்.வரும், 3ம் தேதி காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாணம், திருக்கல் யாண விருந்து ஆகியன நடக்கிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் தொடர்ந்து ஆறு நாட்களும் அலகுமலை முத்து திருமண மண்டபத்தில் தங்கி இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழா குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !