உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி சனி பகவான் கோவிலில் குரு பெயர்ச்சி

மொரட்டாண்டி சனி பகவான் கோவிலில் குரு பெயர்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோயிலில்  நடந்த குரு பெயர்ச்சி விழாவில் அதிகாலை 3.18 மணிக்கு குருபகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், குருபெயர்ச்சி விழா நேற்று துவங்கியது. குரு பகவான், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கும் குரு பெயர்ச்சி விழா, இன்று 29ம் தேதி அதிகாலை 3.18 மணிக்கு நடைபெற்றது. அதையொட்டி, நேற்று 28ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன்குரு பெயர்ச்சி பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1008 கொழுக்கட்டை நிவேத்தியமும், மாலையில் நெய், பால், தயிர், தேன், இளநீர், விபூதி, பன்னீர் என 30 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. குரு பெயர்ச்சி தினமான இன்று 29ம் தேதி அதிகாலை முதல் சிறப்பு ஹோமங்கள், குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம் நடைபெற்றது. விழாவில், குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசம் அணிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருதிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !