உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் கள்ளழகருக்கு நவ. 7ல் தைலக்காப்பு

அழகர்கோவில் கள்ளழகருக்கு நவ. 7ல் தைலக்காப்பு

அலங்காநல்லுார் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு திருவிழா நவ., 7 மாலை 6.30 மணிக்கு நவநீதகிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபதநாதன் சேவையுடன் துவங்குகிறது.

நவ., 8 மாலை சீராப்தி நாதன் சேவை நடக்கும். முக்கிய நிகழ்ச்சியாக நவ., 9 காலை 8.30 மணிக்கு மேல் கள்ளழகர் சுந்தரராஜபெருமாள் அழகர்மலை அடிவாரத்தில் இருந்து பல்லக்கில் மலைபாதை வழியாக மலைஉச்சியில் உள்ள நுாபுரகங்கைக்கு செல்வார். அங்கு மாதவி மண்டபத்தில் பகல் 2:00 மணிக்கு பெருமாளுக்கு பல்வேறு வகை வாசனை திரவியங்கள் மூலம் திருத்தைலம் சாத்தப்பட்டு திருமஞ்சனம் நடக்கும். பின் நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடுவார். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !