மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ரூ.25 லட்சம் உண்டியல் வசூல்
ADDED :2168 days ago
அவலுார்பேட்டை:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 25 லட்சத்து 39 ஆயிரத்து 76 ரூபாய் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை முடிந்து காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் ராமு, ஜோதி ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக 25 லட்சத்து 39 ஆயிரத்து 76 ரூபாய் பணமும், தங்க நகைகள் 147 கிராம் மற்றும் வெள்ளி பொருட்கள் 161 கிராம் செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியின் போது, அறங்காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமேஷ், கணே சன், சரவணன், மணி, சேகர், ஆய்வாளர் அன்பழகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.