உள்ளூர் செய்திகள்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

அக்.24 ஸித்தி தினம் * உலகம் என்ன நினைக்கிறது என கவலைப்படாதே. உனது உள்ளம் என்ன நினைக்கிறது என்பதை கவனி. * அறிவால் கடவுளை அடைய முடியாது. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக உள்ளார். * பொறுமை, நம்பிக்கை என்னும் இரு காணிக்கைகளையே கடவுள் உன்னிடம் எதிர்பார்க்கிறார். * எளிமையாக வாழ விரும்பு. கவுரவத்திற்காக ஆடம்பர செலவுகளை செய்யாதே. * உண்மை எது, உண்மையற்றது எது என்பதை அறிந்து செயல்படுவதே விவேகம்.* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்து. * உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே நேரம் அளவுக்கு அதிகமாக பராமரிக்கவும் வேண்டாம். * கடவுள் மீது முழு கவனம் செலுத்தினால் துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.* உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிபவராக கடவுள் இருக்கிறார். * வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவும், அன்பும் நிறைந்த மனம் ஒன்றே போதும். * வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடவுளை வணங்கு. * உன்னிடம் பணம் எவ்வளவு இருந்தாலும், நீ செய்த வினைகளின் பயனை அனுபவித்தே ஆக வேண்டும்.சொல்கிறார் ஷீரடி சாய்பாபா