உள்ளூர் செய்திகள்

எதிர்காலம் ஒளிமயமாக...

* ஆரம்பக் கல்வி முதல் கல்லுாரி வரை ஆன்மிக கல்வியும் கற்றால் எதிர்காலம் ஒளிமயமாகும்.* பிறருக்கு தீங்கு செய்யும் எண்ணத்தைக் கைவிட்டால் வாழ்வு உயரும். * மாணவர்களிடம் தொண்டு மனப்பான்மையை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை.* உண்மையான கல்வி என்பது இரண்டாவது பிறப்பை போன்றது.* அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தன்மையை வளர்க்கும். ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தை வளர்க்கும். * அறிவுப்பூர்வமாக மட்டுமின்றி இதயபூர்வமாகவும் கடவுளைத் தேட வேண்டும். * உணவைப் பொறுத்தே குணம் அமைகிறது. எனவே சமுதாயத்தில் பண்பை உருவாக்குவதில் உணவிற்கு பெரும் பங்குண்டு. * பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் லாபநோக்கில் செயல்படுவது நல்லதல்ல. * பிறரிடம் அன்பு, சகிப்புத்தன்மை காட்ட வேண்டுமே ஒழிய பழி வாங்கும் நோக்கில் செயல்படக் கூடாது.* கூரிய ஆயுதங்களை விட தீய கருத்துக்கள் பெருந்தீங்கினை உருவாக்கும்.வழி காட்டுகிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன்