உள்ளூர் செய்திகள்

வெற்றிக்கான வழி

* பொறுமையாக இருப்பதே வெற்றிக்கான வழி என்பதை அறிந்துகொள். * நமது பாரதத்தின் பெண்மையின் இலக்கணமாக இருப்பவர்கள் சீதை, சாவித்திரி, தமயந்தி. * பலமின்மையே துன்பத்திற்குக் காரணம். நாம் பலவீனராக இருந்தால் கெட்டவராகிறோம். * ஒருவரிடம் பொய்யும், திருட்டும், கொலையும், பாவச்செயல்களும் இருப்பதற்கு காரணம் அவரது பலவீனமே. * கடைசி மூச்சு உள்ள வரை பணி செய்து கொண்டே இரு. * சம்பாதிக்க வேண்டும் என்ற சாதாரண உலக ஆசையில் மூழ்கி இருக்காதே. * ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி ஒளிந்துள்ளது. * புறவாழ்க்கை, அக வாழ்க்கையில் கட்டுப்பாடுடன் நடந்துகொள். * பசியால் வாடுவோருக்கு முதலில் உணவிடுங்கள். பின் தத்துவ போதனைகளை செய்யலாம். * பிறரது பாராட்டு, விமர்சனத்தை கேட்டால், உன்னால் மகத்தான செயல்களை செய்ய முடியாது.* ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் பெருமையில்லை. கொடுப்பதே உண்மையான பெருமை.* எப்போதும் பிறரை குறை கூறிக்கொண்டே இருப்பவனிடம் சேராதே. * தாழ்ந்த நிலையில் இருந்து மேலான நிலைக்குப் பயணம் செய்வதே வாழ்வின் நோக்கம்.விவரிக்கிறார் விவேகானந்தர்