உள்ளூர் செய்திகள்

நாலும் நாலுவிதம்

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரை 'நால்வர்' எனக் குறிப்பிடுவர். இந்த நால்வரையும், 'பாலை, சூலை, ஓலை, காலை' கொடுத்து சிவபெருமான் ஆட்கொண்டார். மூன்று வயது குழந்தையான ஞான சம்பந்தர் பசியால் அழுத போது சிவபெருமானே பார்வதியுடன் வந்து 'பாலை' ஊட்டி ஞானம் அளித்தார். சிவ வழிபாட்டை மறந்து மனம் போல வாழ்ந்த நாவுக்கரசருக்கு 'சூலை' நோய் என்னும் வயிற்றுவலியைக் கொடுத்து ஆட்கொண்டார். கிழவராக வந்த சிவன், சுந்தரரைத் தன் அடிமை என்று சொல்லி அதற்கான சாட்சியாக 'ஓலை'(அடிமை சாசனம்) காட்டி ஆட்கொண்டார். குருநாதராகத் தோன்றிய சிவன் மாணிக்கவாசகரின் தலையில் தன் 'காலை' (திருவடி) வைத்து தீட்சையளித்தார்.