அன்னமிட்ட பத்மாவதி தாயார்
UPDATED : செப் 23, 2022 | ADDED : செப் 23, 2022
ஆந்திராவில் கடப்பா மாவட்டத்திலுள்ள தளபாகம் என்னும் கிராமத்தில் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அன்னமாச்சாரியார். இவர் பசியால் வாடிய போது, பத்மாவதி தாயாரே நேரில் காட்சியளித்து உணவளித்தார். அதற்கு நன்றிக்கடனாக 16 முதல் 80 வயது வரை திருப்பதி பெருமாள் மீது 32,000 பாடல்களை பாடி மக்களிடையே பக்தியை பரப்பினார். தெலுங்கில் உள்ள இவரது பாடல்கள் செப்பு தகட்டில் பொறிக்கப்பட்டு கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.