உள்ளூர் செய்திகள்

பயங்கர உருவம் சிரித்த முகம்

காளி கோவில்களில் பொதுவாக ஆடு, கோழி பலியிடும் வழக்கம் இருக்கிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலுள்ள தம்பிராட்டி காளியம்மன் கோவிலில் சைவ உணவே படைக்கப்படுகிறது. இந்த காளி விரித்தசடை, மூன்று கண்கள், எட்டு கைகள் என பயங்கர வடிவம் கொண்டிருந்தாலும் முகம் மட்டும் சிரித்த நிலையில் இருக்கும். கோபமுள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டானவள் இந்த அம்பிகை.