தைரியமாய் இருக்க வழி
UPDATED : செப் 21, 2015 | ADDED : செப் 21, 2015
* கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்.* பணம் இருக்கும் வரை தான் சொந்தம் இருக்கும். அது இல்லாவிட்டாலும் கடவுள் உடன் இருப்பார்.* தினமும் கொஞ்சமாவது கீதை படி. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்.* இளமை, பணம், பதவி, ஆயுள் ஆகியவற்றை தாமரை இலை தண்ணீர் போல் பார். இவை நிலையற்றவை.* காலையில் எழுந்து விபூதி இட்டு கடவுளை வணங்கு. கஷ்டம் குறையும். வியாதிகள் தீரும்.* மனதை அடக்கி நல்ல எண்ணங்களுடன் வாழ்வை நடத்து. பிறப்பற்ற நிலை அடைவாய்.-ஆதிசங்கரர்