உள்ளூர் செய்திகள்

படைப்பின் ரகசியம்

* கடவுள் மீது பக்தி செலுத்துவதே மண்ணில் மனிதர்களாகப் பிறந்ததன் ரகசியம்.* பிறவிக்கு காரணமான தாய், தந்தையரை வணங்குவது மனிதனின் முதல் கடமை.* தன்னடக்கம், கடமையுணர்வு, துணிவு இந்த மூன்றையும் பெற்றிருப்பதே பெருமை.* விரதம் இருப்பதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும், அமைதியும் கிடைக்கிறது.* எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறிது நேரம் கடவுளை வணங்கிவிட்டு பிறகு துவங்குங்கள்.* பக்தி ஆழமானதாக இருந்தால் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப் போவது உறுதி.- ஜெயேந்திரர்