ஆயிரம் முறை சொல்
UPDATED : ஜூலை 21, 2014 | ADDED : ஜூலை 21, 2014
* கடவுளின் திருநாமங்களை ஒருநாளைக்கு ஆயிரம் முறையாவது நாம ஜெபமாகச் சொல்லிப் பழகுங்கள்.* சுவரில் எறிந்த பந்து நம்மை நோக்கித் திரும்புவது போல, கோபத்தால் எழுந்த சொல்லும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பும்.* நாம ஜெபத்தால் புண்ணியம் உண்டாகிறது. மனம் ஒருமுகப்படுகிறது.* வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதாலும், பயனற்ற விஷயங்களை பேசுவதாலும் நேரம் விரயமாகிறது.* ஆசையின்றிச் செய்யும் எந்தச் செயலும் ஒருவனுக்கு சிறிதும் பாவத்தை உண்டாக்குவதில்லை.- காஞ்சிப்பெரியவர்