மனதை சுத்தம் செய்
* எந்த தெய்வத்தின் மூலம் எந்த பலன் கிடைக்க வேண்டுமானாலும் விநாயகரை வணங்கினாலே போதும். அவர் அந்த தெய்வத்திடம் கூறி அருளை பெற்றுத் தருவார்.* இஷ்டதெய்வம் இருந்தாலும், வம்சாவளியாக வரும் குலதேவதையை அவசியம் பூஜிக்க வேண்டும். இதற்கு முன் விநாயகருக்கு 'சுக்லாம் பரதரம்' குட்டிக் கொள்ள வேண்டும்.* செம்பைத் தினமும் கழுவி வெளுப்பாக்குவது போல, மனதில் தினமும் சேரும் அழுக்கையும் பக்தியால் சுத்தம் செய்ய வேண்டும்.* ஆசையை விட்டு மனம் கட்டுப்படும் வரை, ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் பைத்தியமாகத்தான் இருக்கிறான். * ராமநாமத்தை தாரக மந்திரம் என்கிறோம். 'தாரகம்' என்றால் 'பாவங்களைப் பொசுக்குவது' என்று பொருள்.* நம் துன்பத்தையே பெரிதாக நினைக்கக்கூடாது. அந்த துன்பத்துக்கு மத்தியிலும், நம்மால் உலகத்துக்கு நலம் ஏற்பட வேண்டும் என்ற உணர்வு வேண்டும்.* எந்தக்குற்றமும் செய்யாதவன் பாவமற்றவன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.- காஞ்சிப்பெரியவர்