அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள்
UPDATED : ஜன 02, 2018 | ADDED : ஜன 02, 2018
* அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள். எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. உலகில் எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது. * மற்றவர் குறைகளை அன்பால் திருத்த முயலுங்கள். அடக்குமுறையால் நிலையான பயன் உண்டாவதில்லை. * நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.* வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம். சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள். * தேவையை அதிகரித்துக் கொண்டே போகாமல், முடிந்த அளவிற்கு எளிமையுடன் இருக்கப் பழகுங்கள். காஞ்சிப்பெரியவர்