உள்ளூர் செய்திகள்

பொருளற்ற பேச்சு வேண்டாம்

* உடம்பில் உள்ள உறுப்புகளில் வாய்க்குத் தான் அதிகமான வேலை கொடுக்கிறோம். சாப்பிடுவது மட்டுமின்றி பேசுவது என்று இரு செயல்களில் வாய் ஈடுபடுகிறது. 'வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி' என்பார்கள். இதில் சாப்பாடு, பேச்சு என்ற இரண்டு விஷயங்களும் அடங்குகின்றன. * நடைமுறையில் நாம் தேவைக்கு அதிகமாக வாய்க்கு வேலை கொடுக்கிறோம். நொறுக்குத்தீனி, பானம் என்று ஏதாவது ஒன்றை நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். வெறுமனே பொருள் இல்லாமல் பேசிக்கொண்டே இருக்கிறோம். இவ்விரண்டுமே நம்மை வேண்டாத பிரச்னைகளில் தள்ளிவிடும். * பேசுவதாக இருந்தால் கடவுளைப் பற்றி பேசுங்கள். பக்திப் பாடல்களைப் பாடுங்கள். நாமஜெபம் செய்யுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருக்கப் பழகுங்கள். அதுபோல சாத்வீகமான நல்ல உணவுவகைகளை மிதமாக எடுத்துக் கொள்ளுங்கள். * மவுனப்பயிற்சியும் , விரதமும் நமக்கு கைகூடும்போது, மனம் கடவுளோடு ஒன்றுவதை நம்மால் உணரமுடியும். தினமும் அரைமணிநேரமாவது தியானம் பழகுவது மவுனவிரதத்திற்கு உதவியாக இருக்கும். -காஞ்சிப்பெரியவர்