கடமையில் ஈடுபடுங்கள்
UPDATED : ஆக 01, 2016 | ADDED : ஆக 01, 2016
* மற்றவர்களின் குறைகளை அன்பால் திருத்த முயலுங்கள். அடக்குமுறையால் நிலைத்த பயன் உண்டாகாது.* நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் அந்த ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.* எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. சாந்த குணத்துடன் கடமையில் ஈடுபடுங்கள். எல்லாம் நலமாக அமையும்.* வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம்.- காஞ்சிப்பெரியவர்