எல்லாம் கடவுளின் கருணை
UPDATED : டிச 20, 2017 | ADDED : டிச 20, 2017
*அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையே. *மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்தி கொண்டிருந்தால் மனத்துாய்மையுடன் வாழ முடியும்.*எதையும் அலட்சிய மனோபாவத்துடன் அணுகக்கூடாது. சிறிய விஷயமாக இருந்தாலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.*உழைப்பதற்கு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் தந்திருக்கிறார். அதன் மூலம் நற்செயலில் ஈடுபடுங்கள்.- காஞ்சிப்பெரியவர்