பெண்களே! அழகை பார்க்காதீங்க!
UPDATED : நவ 20, 2011 | ADDED : நவ 20, 2011
* நம் குறைகளைப் பொறுத்து நம்மைக் காக்கும் பரமேஸ்வரன், அனைத்து உயிர்களிடமும் அன்பைக் காட்டுகிறான். நாமும் இறைவனின் அழிவற்ற மாறாத அன்பைப் பயில வேண்டும்.* பசுமாட்டில் சுவாமியைத் தியானம் செய்வது என்பது கோ பூஜை செய்வது மட்டும் அல்ல, அதற்குள்ளே ஈஸ்வரன் இருப்பதாகவும் ஐதீகம்.* கணவனுக்குள்ளும் ஈஸ்வரன் இருப்பதால், பெண்கள் தங்கள் கணவன் குணம் உள்ளவரா, இல்லையா, அழகுள்ளவரா என்று பாராமல் சேவை செய்ய வேண்டும்.* இறைவனின் அருளைப் பெறும் வல்லமை பெற்றவர்கள், அருளை பாவிகளுக்காகப் பயன்படுத்த வேண்டும். இதனால், உலகம் அன்பினால் நிரம்பி ஆனந்த உலகமாக மாறும்.* நமக்கு நெருக்கம் இல்லாதவரிடமும், குணமற்றவரிடமும், நமக்கு எந்தவித லாபமும் தர இயலாதவரிடமும் அன்பு கொள்வோமானால் அதுவே உண்மையான அன்பு.- காஞ்சிப்பெரியவர்