உள்ளூர் செய்திகள்

நல்வழியில் திரும்பட்டும்

* மனிதர்களை விட, கடவுளிடம் கஷ்டத்தைச் சொல்லி பிரார்த்திப்பதால் அவனருளால் துன்பம் விரைவில் தீரும்.* உடம்பு, உள்ளம் இரண்டாலும் மனிதன் பாவம் செய்கிறான். பக்திக்கு மட்டுமே பாவத்தைப் போக்கும் சக்தி இருக்கிறது.* ஆனந்தம் என்பது வெளியுலகப் பொருட்களால் உண்டாவதில்லை. மனமே மகிழ்ச்சிக்கான மூலகாரணமாக இருக்கிறது.* யாரையும் வெறுக்க வேண்டாம். தீயவர்களின் மனமும் நல்வழியில் திரும்பட்டும் என பிரார்த்திப்போம்.- காஞ்சிப்பெரியவர்