நலமாக வாழ்வோம்
UPDATED : மார் 02, 2016 | ADDED : மார் 02, 2016
* நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.* ஆசையின்றி செய்யும் எந்த செயலும் பாவத்தை உண்டாக்காது. ஆசையுடன் செய்யும் எதுவும் புண்ணியத்தை தராது.* மனம் என்பது கடவுளின் இருப்பிடம். அதை துாய்மையாக வைத்திருப்பது நம் கடமை.* கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவிலில் காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டானது.* பாவத்தை நொடியில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு மட்டுமே இருக்கிறது.-காஞ்சிப்பெரியவர்