வாழ்வை எளிமையாக்கிக் கொள்!
* பிறரிடம், நம் அன்பை ஒப்புக்கு காட்டாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும்.* வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டால், பொருளுக்காக எப்போதும் அலைய வேண்டிய அவசியமில்லை.* வெளிநாட்டு வியாபாரத்தால் அந்நியச் செலாவணி ஒரு தேசத்துக்கு கிடைக்கும். அதுபோல, மனிதனுக்கு மறு உலகத்தில் செலாவணி இறைவனின் திருவருள் ஒன்று தான். அதனைப்பெற வாழும் காலத்திலேயே பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.* ஒரு செயலை 'நான் செய்கிறேன்' என்ற மமதை எண்ணம் போய்விட்டால் அதுவே பகவானுக்கு நாம் செலுத்தும் நமஸ்காரம் தான்.* சிவநாமாவைக் கூறுவதால் பாவங்கள் விலகி மோட்சத்திற்கான வழி கிடைக்கும்.* வயலில் களை பிடுங்குவது போன்று, வாழ்க்கையில் தேவையில்லாத செலவுகளைப் பிடுங்கிப் போட்டால், புண்ணியமும், நிம்மதியும் கிடைக்கிறது.* தங்களுக்கும், சமூகத்துக்கும் ஒரு செயலை செய்யும் முன், பகவானுக்கு அனைவரும் சேவை செய்ய வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்