தீபாவளியின் நோக்கம்
UPDATED : நவ 11, 2012 | ADDED : நவ 11, 2012
* அன்பால் பிறரைத் திருத்தி நல்வழிப்படுத்த முடியும். அன்பால் ஒருவரை திருத்தினால் தான் நமக்குப் பெருமை.* பாவம், புண்ணியம் என்பது ஒரு செயலைப் பொறுத்தது அல்ல. செயலாற்றுபவரின் நோக்கத்தைப் பொறுத்தது. நற்செயலாக இருந்தாலும், நோக்கம் தவறானதாக இருந்தால் அது பாவமே. * ஆசை, கோபம், துவேஷம், பயம் ஆகியவற்றை மனதை விட்டு அடியோடு அகல வேண்டும். * விருப்பு வெறுப்புடன் செய்யும் எச்செயலும் பாவமானது தான். விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயலாற்றும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. 'நான்' என்ற அகம்பாவம் இல்லாமல் மனிதன் தன் கடமைகளைச் செய்ய வேண்டும்.* அறியாமை என்பது வியாதிக்குச் சமமானது. அறியாமை நம்மிடம் இருக்கும்வரை நமக்கு மகிழ்ச்சி இல்லை. அறியாமை நோய் தீர ஞானமே சிறந்த மருந்து. அந்த ஞானதீபத்தை மனதில் ஏற்றவே தீபாவளி கொண்டாடுகிறோம். - காஞ்சிப்பெரியவர்